1. மாதுளை - மாதுளை பழம்
வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம்
வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.
2. நாரத்தம் பழம் - நாரத்தம் பழம்
சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று
உப்புசம் விலகும்.
3. முந்திரிப் பழம் - கொடி முந்திரிப்
பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத்
துலங்கும்.
4. கண்டங் கத்திரிப்பழம் - கண்டங்கத்திரிப் பழம்
1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க
வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப்
பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில்
இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை
மறையும்.
5. தூதுளம் பழம் - தூதுளம் பழத்தை
அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச
நோய் தணியும். கபம் விலகும்.
06. பலாப்பழம் - பலாப்பழத்தைத் தேனுடன்
கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள்
வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால்
உடலில் சூடு உண்டாகும்.
07. இலந்தைப் பழம் - பகலுணவுக்குப் பின்
இலந்தைப் பழம் சாப்பிட்டு வர,
செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு,
பித்தம் விலகும்.
08. திராட்சை - உலர்ந்த திராட்சைப்
பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி
பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர
மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.
09. பப்பாளிப் பழம் - யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம்
தினம் கால் பழம் சாப்பிட்டு
வர, வீக்கம் கரையும், உடலுக்கும்
வலிமை சேர்க்கும்.
10. வாழைப்பழம் - மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப்
பன்மடங்கு பெருக்கும்.
11. வில்வப் பழம் - பாலில் கலந்து சாப்பிட
மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம்
நன்கு செயல்படும்.
12. அரசம் பழம் - விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில்
அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.
13. சீமை அத்திப்பழம் - மூட்டு வலியைப் போக்கி
ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை
அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது.
தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில்
போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும்.
இரத்தச் சோகை விலகும்.
14. பேரீச்சம் பழம் - இல்லற சுகம் சோர்வின்றி
இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன்
சாப்பிடுங்கள். இரத்தச் சோகை விலகும்.
15. தர்பூசணிப் பழம் - கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத்
தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.
16. முலாம் பழம் - மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது
முலாம்பழம். உடம்பு 'எடை' போட
இதனை அடிக்கடி சாப்பிடலாம்.
17. விளாம்பழம் - பித்தம் அதிகமாகிச் சித்தம்
தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள்
விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில்
சிறிது வெல்லம் கலந்து பிசைந்து
சாப்பிட, பித்தம் தணியும். காம
உணர்வு கட்டுப்படும்.
18. அன்னாசிப் பழம் - குடலில் பூச்சி சேருவதை
வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால்
அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன்.
மழைக்காலத்தில சாப்பிட்டு வர, தொண்டைக்கட்டு நீங்கும்.
19. தக்காளி - இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம்
செய்து இளமை தரும் தக்காளி,
மலச்சிக்கலையும் போக்கும்.
20. எலுமிச்சம்பழம் - எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி
நின்றுவிடும்,
21. கமலா - இல்லற இன்பம் செழிக்க,
1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத்தேன்
கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற
இன்பம் செழிக்கும்.
22. கொய்யாப் பழம் - கனிந்த கொய்யாப் பழம்
சாப்பிட்டு வர விக்கல் வராது.
இரைப்பை வலிமை பெறும்.
23. களாப் பழம் - களாப் பழத்தை உணவுக்குப்
பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய
நீர் குறைந்து தலைக்கனம் குறையும்.
24. நறுவிலிப் பழம் - நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு
வர மலச்சிக்கல் அற்றுப் போகும்.
25. ஆல்பகோடாப் பழம் - காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி
வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும். அப்போது,
ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது
இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல்
விலகும்.

CONTACT:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)
SPECIALIST IN:
Obesity, Menstrual Problem, Diabetes, Arthritis, Epilepsy,
Skin Diseases, Sexual Problems, Kidney Stones, Asthma & Piles
HEAD OFFICE:
Aadhavan Siddhashram (P) Ltd.,
No.155, 15th Sector, 94th Street,
K.K. Nagar, Chennai- 600 078.
OUR BRANCHES:
Karur - Pondicherry - Madurai - Thiruvallur - Mumbai
Phone: 044-23728599
98840 76667
81241 76667
77081 76667
Aadhavan Siddha what's app +91.8754473577
Follow Us